திமுக பிரமுகர்களை பற்றி அவதூறு: கருத்துக்களை பதிவிட்டவர் கைது

திமுக பிரமுகர்களை பற்றி அவதூறு: கருத்துக்களை பதிவிட்டவர் கைது

கோப்பு படம் 

முகநூல் வலைதள பக்கத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில் திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டது

தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர். தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வந்த நீடாமங்கலம் தாலுகா கப்பலுடையான் தெற்கு தெருவை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் சதீஷ்குமார் என்கிற சதா சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story