காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் கைது

காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கர் கைது

போலீசார் வாகனம்

காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார்.அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தாராபுரம் பகுதியில் போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.இதில் சவுக்கு சங்கருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கபட்ட பின்னர் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story