திருப்பூர் அதிமுக பிரமுகர்கள் குறித்து அவதூறு: புகார் மனு!

திருப்பூர் அதிமுக பிரமுகர்கள் குறித்து அவதூறு: புகார் மனு!

திருப்பூர் அதிமுக பிரமுகர்கள் குறித்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.


திருப்பூர் அதிமுக பிரமுகர்கள் குறித்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் அதிமுக பிரமுகர்கள் குறித்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக ராம்குமார் என்பவர் செயல்பட்டு வருகிறார் இவர் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் இந்நிலையில் ராம்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக பதிவிடப்பட்டு வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சைபர் கிரைம் பிரிவில் இணையதளம் வாயிலாக புகார் மனு அளித்திருந்தார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் ராம்குமார் குடும்ப உறுப்பினர் குறித்தும் கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக உள்ள ராமச்சந்திரன் மற்றும் அதிமுக பிரமுகர்களை இணைத்து ஆபாசமாக பதிவிட்டு தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கும் கட்சி பிரமுகர்கள் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்களால் தான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபாச அவதூறு பதிவிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தார்.

Tags

Next Story