17ஆண்டுகளாக பழுதடைந்த தார் சாலை: ஆட்சியரிடம் மனு

17 ஆண்டுகளாக பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து அமைத்து தர கோரி மண்ணச்சநல்லூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருச்சி மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தனர் அம் அணுவில், அய்யம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தெற்கியர் வழியாக கீழர் அக்கரைப்பட்டி, சீரடி சாய்பாபா கோவில், தேவிமங்கலம், சமயபுரம் டோல் பிளாசா ஆகிய பதிதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான தார் சாலையாக உள்ளது. இந்த சாலை கடந்த 17 ஆண்டுகளாக புதுபிக்கபடாமல் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியாக காணப்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையானது மழை நீரால் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமறி கீழே விழுகின்றனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் கிராம பொது மக்கள் பல ஆண்டுகனாக அய்யம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags

Next Story