பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பு!

ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை நிலைய குடோனில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை நிலைய குடோனில் பழுது அடைந்து பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்பிட ஏதுவாக அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, தேர்தல் பிரிவு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டாட்சியர்கள் கணேசன் செல்வன், அரசியல் பிரமுகர்கள் இருந்தனர்.

Tags

Next Story