குன்னத்தில் சேவை குறைபாடு: இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு உத்தரவு

குன்னத்தில் சேவை குறைபாடு: இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு உத்தரவு

மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்

குன்னத்தில் சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.

பெரம்பலூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது 50, 2016ல், சொந்தமாக தொழில் தொடங்க விண்ணப்பித்து, தனியார் வங்கியில் கடன் அட்டை என்ற கிரடிட் கார்டு பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் இறுதியாக கார்டில் இருந்து 95,258 ஐ ஸ்வைப் செய்து சரியாக திருப்பிச் செலுத்தினார். அதே ஆண்டு, அவர் தனது கடன் அட்டை. கிரடிட் கார்டை, வங்கியில் ஒப்படைக்க முடிவு செய்து அதை ஒப்படைத்தார்.

இதையடுத்து அவரது கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 7 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சரவணனுக்கு 8,088 ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அதை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் வங்கி சரவணனைத் தொந்தரவு செய்தது.

இதையடுத்து அந்த தனியார் வங்கி மீது சரவணன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு ஆவணங்களையும் பரிசீலித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவஹர் தலைமையிலான, நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் கொண்ட அமர்வு, ஜனவரி 12ஆம் தேதி வங்கியின் சேவை குறைபாடு காரணமாக சரவணனுக்கு இழப்பீடாக 1 லட்சத்து 10 ஆயிரம் வழங்க தனியார் வங்கிக்கு உத்தரவிட்டனர்.

Tags

Next Story