வாக்காளர் பட்டியலில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பெயர் நீக்கம் - புகார்

வாக்காளர் பட்டியலில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பெயர் நீக்கம் - புகார்

வாக்காளர் பட்டியல் 

கெங்கவல்லி அடுத்த கூடமலை ஊராட்சிதுணைத்தலைவர் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு குறித்து, சேலம் புறநகர மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் ஆர்டிஓவிடம் புகார் தெரிவித்துள்ளார்.கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடமலை ஊராட்சி மன்ற துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த முத்துலிங்கம், கிளை செயலாளர் மாரி முத்து, பாசறை நிர்வாகி ஸ்ரீதர் உள்பட 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், நேற்று ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷிடம் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆர் டிஓ ரமேஷ், இதுகுறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு நீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, ஆத்தூர் எம் எல்ஏ ஜெயசங்கரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story