வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி

வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைப்பெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாரும் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

சேலம் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியில் பேலட் பேப்பர்கள் பொருத்தி போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு அந்தந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் அனுப்பும் பணி தொடங்கியது.

வாக்கு சாவடி அலுவலர்கள் வாக்கு சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை சரி பார்த்து பெற்றுக் கொண்டு மினி லாரிகளில் எடுத்து சென்றனர்.

Tags

Next Story