டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

விவசாயிகள் மனு 

டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்குமாறு விவசாயிகள் குறைதீர் திட்டத்தில் விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் நலச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில், சம்பா சாகுபடி செய்த நெல் பயிர்கள் அனைத்தும் பாசன தண்ணீரின்றி கதிர்வரும் தருணத்தில் ஆயிரக்கான ஏக்கர்களில் செய்யப்பட்ட கருகிய நெல் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தும்,உரிய பாசன தண்ணீர் திறக்க கோரியும், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரியும், தமிழக அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்க கோரியும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழக்கிட உரிய நடவடிக்கை கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் கே.பி.துரைராஜ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் எம்.பெரியசாமி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்

Tags

Next Story