பழுதடைந்த கட்டடத்தை இடிக்க கோரிக்கை

காஞ்சிரங்குடி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள பழுதடைந்த சமுதாயக்கூடத்தை உயிர் சேதம் ஏற்படும் முன் இடித்து அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் 5,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல ஆண்டு காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இங்கு அனைத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதால் சமுதாய கூடத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சமுதாய கூடத்தின் கற்கள் விழுவதாலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி சமுதாய கூடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story