காயமடைந்த கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

காயமடைந்த கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நிவாரணம் வழங்க கோரிக்கை

சிவகங்கை அருகே நாடக மேடை இடிந்து விழுந்து காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக பள்ளி வளாகத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டு மாணவர்கள் நடனமாடினர். இதைப் பார்க்க பெற்றோர், பொதுமக்கள் வந்திருந்தனர். சிலர் பள்ளி சாய்தளத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சாய்தளத்தில் நின்ற சிலர் நடனம் ஆடியதில் சாய்வுதள கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பேரணிப்பட்டி ரீனா (35), கீழப்பூங்குடி கேஸ்மா (21), சந்திரா (55) ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story