சாலையோர விளம்பர பலகைகள் உத்திரமேரூரில் அகற்ற கோரிக்கை

சாலையோர விளம்பர பலகைகள் உத்திரமேரூரில் அகற்ற கோரிக்கை

சாலையோரத்தில் உள்ள விளம்பர பலகை

உத்திரமேரூரில் சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள கடை தெருவிற்கு, உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடைகளில் பல்வேறு பொருட்கள் வாங்க காலை முதல் இரவு வரை வாடிக்கையாளர்கள் குவிகின்றனர்.

உத்திரமேரூர் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க கடை வியாபாரிகள், தங்களது கடைகள் குறித்த விளம்பர பலகைகளை, சாலையோரங்களில் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விளம்பர பலகைகள் சாலையோரங்களில் இருப்பதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்,

தங்கள் இருசக்கர வாகனங்களை, விளம்பர பலகைகளையொட்டி நிறுத்துகின்றனர். இதனால், வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாமல், மற்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உத்திரமேரூரில் சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story