கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை !!

கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை !!

கோரிக்கை

தூத்துக்குடியில் 39வது வார்டு பகுதியில் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் 39வது வார்டு பகுதியில்கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பாஜக கிளை தலைவர் கணேசன் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு கனக சபாபதி தெருவில் கழிவு நீர் கால்வாய் சேதம் அடைந்து, கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பிரச்சனை நிலவுகிறது. இது தொடர்பாக அதகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே, இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story