100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு

100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம் தோகூரில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.காந்தி தலைமையிலும், திருச்சென்னம்பூண்டியில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பாஸ்கரன், கிளைச் செயலாளர் எம்.அகிலா, இ.பன்னீர்செல்வம் மற்றும் திரளான நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



Tags

Next Story