அரசுக்கல்லூரியை தோ்தலுக்கு முன்பு திறக்க கோரிக்கை

அரசுக்கல்லூரியை தோ்தலுக்கு முன்பு திறக்க கோரிக்கை

ஆலங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அரசுக் கல்லூரியை தோ்தலுக்கு முன்பு திறந்து வைக்க வேண்டும் என திமுக., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

ஆலங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அரசுக் கல்லூரியை தோ்தலுக்கு முன்பு திறந்து வைக்க வேண்டும் என திமுக., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அரசுகல்லூரியை தோ்தலுக்கு முன்பு திறந்துவைக்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் அமைச்சா் கண்ணப்பனிடம் அளித்த மனு.ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுநீா்குளம் ஊராட்சி மலை ராமா் கோயில் அருகே அரசு கலைக்கல்லூரி கட்ட ரூ14கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பணிகள்முடிவடைந்து விட்டது. இந்த கல்லூரியோடு நிதி ஒதுக்கப்பட்ட சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி பணிகள் முடிவடைந்து தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. தற்போது கல்லூரி ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது . அங்கு போதுமான இடவசதியும் இல்லாத காரணத்தினால் சிப்ட் முறையில் இயங்கி வருகிறது. இதனால் மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.எனவே ஆலங்குளம் அரசு கலைக் கல்லூரியை தோ்தலுக்கு முன்பாக திறக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story