பாசனத்திற்கு இடையூறாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற கோரிக்கை

பாசனத்திற்கு இடையூறாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற கோரிக்கை

ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் 

குருவிக்கரம்பை அருகே, குளத்திற்கு நீர் நிரப்ப தடையாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை அருகே, குளத்திற்கு நீர் நிரப்ப தடையாக உள்ள, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என 7 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம், மருங்கப்பள்ளம், சாந்தாம்பேட்டை, நாயகத்திவயல், சேதுபாவாசத்திரம், வெளிமடம், துறையூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கல்லணைக் கால்வாய் 5 நம்பர் வாய்க்காலின் குறுக்கே, குருவிக்கரம்பை பெரியகுளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்காக வாத்தலைக்காட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலம் அருகே, ஆற்றின் குறுக்கே கான்கிரீட் சுவர் பொதுப்பணித்துறை அனுமதியின்றி எழுப்பப்பட்டுள்ளது. கடைமடை பகுதிகளுக்கு கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால், தடுப்புச்சுவரை தாண்டி தண்ணீர் செல்லாததால் 7 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், அந்த பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்ப முடியாமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என 7 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story