தரமற்ற சாலையை தடுத்து நிறுத்த கோரிக்கை !

தரமற்ற சாலையை தடுத்து நிறுத்த கோரிக்கை !

தரமற்ற சாலை

காரைக்குடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தரமற்ற சாலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் நகராட்சி ஒப்பந்த பணியின் மூலம் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரைக்குடியின் பிரதான கோவிலாக விளங்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மற்றும் அதன் அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய மிக முக்கிய சாலைகளில் பேவர் பிளாக் மூலம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியில் சாலையை முறையாக போடமால் வெட்மிக்ஸ் பரப்பாமால் சாலையின் மேல் தூவக்கூடிய டஸ்ட் மண் கொண்டு அதன் மீது பேவர் பிளாக் கற்களை அடுக்கி செல்லக்கூடிய நிலையில் சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் இது குறித்து நகராட்சிக்கும், அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கும் புகார் தெரிவித்தனர். அவர்கள் ஆய்வு செய்ய வராத நிலையில், தொடர்ந்து அந்த தரமற்ற சாலை போடும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த தரமற்ற சாலையால் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பக்தர்களும், வாகனங்கள் சொல்வதாலும் ஒரு சில நாட்களிலேயே இந்த சாலை பெயர்ந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நகராட்சி ஆணையாளர் இந்த சாலையை ஆய்வு செய்து மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story