ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதல் குடிநீர் தொட்டி !

ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதல் குடிநீர் தொட்டி !

குடிநீர் தொட்டி

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில் பொற்பந்தல், சத்யாநகர் கணபதிபுரம், கிடங்கரை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இப்பகுதியில் கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தவும் அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபுரம் கிராமத்தில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகிக்க, 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கோடைக்காலம் நெருங்குவதால் விரைவாக இக்குடிநீர் திட்ட பணியை முடித்து, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story