விராலிமலையில் சுவாமி சிலை உடைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி

விராலிமலையில் சுவாமி சிலை உடைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி
X

உடைக்கப்பட்ட சிலை 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மலைக்கோயில் செல்லும் பாதையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்ணாலான சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற ஸ்தலம் ஆகும். மலைக்கோயில் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. 207 படிகள் மூலம் செல்லும் பாதை ஒன்று, சறுக்கு வடிவிலான யானை அடிபாதை ஒன்று, வாகனங்களில் செல்ல அகலமான தார் சாலை பாதையும் உள்ளது.தார் சாலையோரங்களில் மண்ணால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை, நாரதர், மீனாட்சி, முனிவர்கள், மயில், சிவன் உள்ளிட்ட மண் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இந்தச் சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, மலைப்பாதை ஓரங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story