கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கஞ்சா-கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது என கோவையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கூறினார்.


திமுக ஆட்சியில் கஞ்சா-கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது என கோவையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை:கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் காரணமாக 58 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் உயிரிழப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருவதாக தெரிவித்தார். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்த்துறை ஆகியோரின் மெத்தன போக்கால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்து இருக்கின்றது எனவும் இதனை கண்டித்து சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும் சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக சார்பில் இன்று போராட்டங்கள் நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அப்பாவி மக்களுக்கானது எனவும் தெரிவித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை,கள்ள சாராய விற்பனை அதிகரித்து உள்ளது எனவும் தெரிவித்தார். கள்ளசாராய விற்பனை நடந்த இடத்தின் அருகில் தான் காவல் நிலையம்,நீதிமன்றம், அரசு அலுவலங்கள் இருக்கின்றது எனவும் இதன் பின்னணியில் யார் உள்ளன என்பது வெளியில் வர வேண்டும் என்றார். மெத்தனால் போன்ற மூலப்பொருட்கள் ஆந்திராவில் இருந்து வந்து இருப்பதாக கூறியவர் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தவர் காவல் துறை மீது மட்டும் நடவடிக்கை இல்லாமல் இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கள்ளச்சாராயம் பருகி உயிர் இழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தேவையானவற்ற அனைத்தையும் அரடு செய்ய வேண்டும் எனவும் கள்ளச்சாராயம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும்,எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் சுட்டிக்காட்டிய பொழுதே ஆட்சியாளர்கள் சரி செய்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலை விட ஆறு சதவீதம் குறைவான வாக்குகளை தான் திமுக வாங்கி இருக்கிறது என தெரிவித்த அவர் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் காவல்துறையினர் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர் அவர்கள் எங்கள் மீதான அடக்கமுறையை கைவிட்டுவிட்டு கஞ்சா விற்பவர்கள்,கள்ளச்சாராயம் விற்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் காவல்துறையினரின் கையை கட்டி போட்டது யார்? என கேள்வி எழுப்பிய அவர் கோவை மாவட்டத்திற்கான திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக தான் என்றவர் கோவை மாவட்ட மக்களை இனியும் புறக்கணிக்காமல் திமுக அரசு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் இல்லையெனில் நீதிமன்றம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தவர் காவல்துறையினர் அதிமுக ஆட்சியில் சுயமாக செயல்பட்டதாகவும் அவர்கள் சுயமாக செயல்பட்டால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story