ஜெயங்கொண்டத்தில் சவுக்கு சங்கரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் சவுக்கு சங்கரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

ஜெயங்கொண்டத்தில் சவுக்கு சங்கரை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் பெண்களையும், காவலர்களையும் தரக்குறைவாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி அலுவலகத்திலேயே மாவட்ட தலைவர் முருகேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சவுக்கு சங்கரை கண்டித்தும் பெண்களை இழிவாக பேசியதற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெண்கள் கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story