இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் தொண்டியில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் தொண்டியில் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து சமுகம் சார்பில் பாலஸ்தீனத்தில் போர் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெரும் போரை நிறுதி அப்பாவி மக்களை பாதுகாக்க கோரி தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேலை கண்டித்தும் போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்திய அரசை குரல் கொடுக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், இந்து பரிபாலன சபை, தொண்டி பங்கு தந்தை உட்பட அனைத்து ஜமாத் மற்றும் சமுதாய மக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story