இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படு கொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையாக தோழர். அ.குமார்,மாவட்ட செயலாளர், சிபிஎம் முன்னிலையாக தோழர் இரா.சிசுபாலன் மாநிலக் குழு சிபிஎம் திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, திமுக நகர கழக செயலாளர் நாட்டான் மாது கண்டன உரையாக கோ.ராமதாஸ், மாவட்ட செயலாளர், மதிமுக மாவட்ட செயலாளர்,த.கு.பாண்டியன், என்.சுபேதார், ஏ.சிராஜுதீன், மாவட்ட செயலாளர், கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story