மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம் செல்லும் சாலையில் வெளியாத்தூர் என்கிற இடத்தில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் திடீரென பொங்கல் தினத்தன்று அதே பகுதியில் டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறந்தனர். இதனை கண்டித்து திருப்பத்தூர் அண்ணா சாலை முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயலாளர் கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story