திருச்சுழியில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சுழியில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
திருச்சுழியில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் தலைவிரித்தாடும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே இந்து இளைஞர் முன்னணி சார்பில் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பொருட்களை கட்டுப்படுத்திடாத விடியா திமுக அரசைக் கண்டித்தும், போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ஜாபர் சேக்கை கைது செய்து கடுமையான தண்டனை கொடுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து இளைஞர் முன்னணி நரிக்குடி ஒன்றிய செயலாளர் அழகர் தலைமை வகித்தார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி விருதுநகர் மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் ஆர்.எஸ்.எஸ் விஸ்தாரக்கை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் காரியாபட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இந்து இளைஞர் முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விடியா திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story