ஆளுநர்கள் அடாவடித்தனங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆளுநர்கள் அடாவடித்தனங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆளுநர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓன்றிய பாஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை வழங்கிட வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை சட்டமாக்காமல் ஆளுநர்கள் நிறுத்தி வைக்கக்கூடாது.

மாநில அரசுகள் தங்களுக்கான நிதித் தேவைகளுக்கு கடன் வாங்குதை தடுக்கக்கூடாது, எதிர்கட்சித்தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு தங்களது புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு மிரட்டக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story