பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேராவூரணி அண்ணா சிலை அருகே பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், உடனே போரை நிறுத்தக்கோரியும் அனைத்து கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) வீரமணி தலைமை வகித்தார் . திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட பொறுப்பாளர் திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்

.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பாலசுந்தரம் முடித்து வைத்து பேசினார் .ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர் ஆயுதங்களை வழங்க கூடாது ,பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் ,மருத்துவமனை ,அகதிகள் தங்கும் இல்லங்கள்,பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன .ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் , ஒன்றிய செயலாளர் சித்திரவேலு , உட்பட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story