தவறான செய்தி வெளியிட்ட செய்தியாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளப்பட்டியில்,தவறான செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு எதிராக, எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தவறான செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு எதிராக,எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி நகராட்சியில் பணியாற்றும் பெண்களையும், பள்ளப்பட்டி பேரூராட்சி ஆணையரையும் தவறாக சித்தரித்து வார இதழில் செய்தி வெளியிட்ட குமுதம் நிருபர் அரவிந்தனை கண்டித்தும், அவருக்கு துணை நின்ற சில பத்திரிகையாளர்களை கண்டித்தும் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில், பள்ளப்பட்டி ஷா நகரில், கட்சியின் பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக்கின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கொள்கையை சேர்ந்த பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்ணன் கோஷங்களை எழுப்பினர். மேலும் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையை கிழித்து வீசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story