நில அளவை செய்த வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நில அளவை செய்த வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

நில அளவை செய்த வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டக்ம் வேடசந்தூர் வட்டாட்சியர் விஜயலட்சுமியை கண்டித்து அனைத்து தொழிற்சங்க மாநில, மண்டல, கோட்ட பொறுப்பாளர்கள், மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் வேடசந்தூர் வட்டாட்சியரை இடமாற்றம் செய்யக் கூறி மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐங்கிய சங்கம், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story