சிவகங்கை 50 மில்லி மண்ணெண்ணெய் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை 50 மில்லி மண்ணெண்ணெய்  கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

சிவகங்கையில் ரேசன் கடைகளில் 50 மில்லி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு 50 மில்லி மண்ணெண்ணெய் வழங்கிய சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் உலகநாதன் தலைமை வகித்தார்.

ஒன்றிக்குழு உறுப்பினர்கள் தனசேகரன், வழக்கறிஞர் மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு அனைத்துப்பொருள்களையும் வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்

Tags

Next Story