அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய கோரி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். கவுர தலைவர் ரவீந்திரன், ஆலோசகர் பாண்டியன், துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார்.இதில், ஓட்டுநர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 'ஹிட் அண்ட் ரன்' புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சாலை விதிகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story