பெரம்பலூரில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

பெரம்பலூரில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு நியாயம் கேட்டும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிர்வாக சீர்கேட்டினை கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சிவாஐயப்பன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்ஜூன் 25ஆம் தேதி நடைபெற்றது.

கட்சியின் விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை கண்டித்தும், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story