அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில தலைவி சுகமதி, பட்டுவளர்ச்சித் துறை சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பெரியசாமி, ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும், அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story