அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில சங்கத்தின் முடிவின்படி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி 10 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வருவாய் துறை அலுவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சுப்ரமணியன், தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாரதி வளவன் ஆர்ப்பாட்ட துவக்க உரை, நிகழ்த்தினார்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினார், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் கொளஞ்சி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி, சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் பொன் ஆனந்தராஜ். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் சிவா, மற்றும் சின்னதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறைஅலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் ராஜ்குமார் நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story