அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர்.மாது தலைமையில் அரசு ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமல் போதுமான கால அவகாசம் வழங்காமல் அதிகார நிர்பந்தம் செய்து கட்டாய முன் வருமான வரி வரையறையின்றி பிடித்தம் செய்யும் கருவூலத் துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் அவர்களின் ஊழியர் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் கலந்துகொண்டு கோரிக்கையுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story