ஓமலூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

ஓமலூரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ்நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பாக போதைப்பொருள் தமிழகத்தில் அதிக புழக்கத்தில் உள்ளதாகவும், அதனால் இளைஞர்கள் மத்தியில் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story