சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளை வருகை தந்திருந்தார். நேற்று காலையில் மயிலோடு தேவாலய பாதிரியார் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி தலைவர் சேவியர் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் .பின்னர் சேவியர் குமாரின் குடும்பத்தினருடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேவியர் குமாரின் மனைவி ஜமீலா குழந்தைகள், குடும்பத்தினர் கலந்து கொண்டு பேசினார்கள். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:- சேவியர் குமார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பதால் மட்டும் இந்த போராட்டம் நடத்தவில்லை. அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படும் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் போராட்ட நடத்தி வருகிறோம்.

சேவியர் குமார் கொலைக்கு காரணமானவர்களை இதுவரையிலும் கைது செய்யவில்லை. அரசியல் அல்லாத கொலைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. சேவியர் குமார் கொலை வழக்கில் தீர்வு காணப்படும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும். என்று அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story