வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் டல்லஸ் தலைமையில் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் மகாராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார் மாவட்ட செயலாளர் சுகந்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார் மாவட்டத் தலைவர் முபாரக் அலி சிறப்புரையாற்றினார் மாநில துணைத்தலைவர் மங்கல பாண்டியன் நிறைவுரை வழங்கினார் மாவட்ட இணைச் செயலாளர் பாலகுருநாதன் நன்றியுரை வழங்கினார். மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story