ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்துார் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்துக்கு மாநில தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட துாய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வெளி முகமை மூலம் சம்பளம் வழங்குவதை நிறுத்தி விரைய செலவுகளை ரத்து செய்ய வேண்டும். தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் நுாற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story