சேலம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
சேலம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில், செயலாளர் ஜான்ஆஸ்டின் முன்னிலை வகித்தனர்.
இதில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story