கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

சிவகங்கையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் நான்கு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டுமெனவும், மூவாயிரம் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பொது மக்களின் பிரச்சினைகளை உடனே தீர்க்க முடியாத நிலையில் உள்ளோம்.

அரசு மட்டத்தில் இரண்டு கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில் அலுவலக உதவியாளர் காலியிடங்களில் நிரப்ப வருவாய் நிர்வாக ஆணையர் உடனடியாக கடிதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story