விவசாயியை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயியை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஏபி வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 16ஆம் தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது , போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் போது காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் விவசாயிகளை தாக்கியதாகவும், இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் டி.எஸ்.பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story