பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 20 லட்சம் இழப்பீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்...
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 20 லட்சம் இழப்பீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர் மேலும் 13தொழிலாளர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்,

தமிழக அரசு சார்பாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் விதிமுறை மீறல்களை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வெடி விபத்து நடைபெற காரணமாக இருந்த முதல் குற்றவாளியான முத்துகிருஷ்ணன் என்பவர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நாள் அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் கைது செய்யப்படாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் என கண்டன முழக்கமிட்டனர்.

Tags

Next Story