ரேஷன் கடையில் எண்ணெய் வித்துக்களை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் எண்ணெய் வித்துக்களை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் வழங்குமாறு, திண்டுக்கல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

ரேஷன் கடைகளில் தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் வழங்குமாறு, திண்டுக்கல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல் நாகல் நகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் கேசவமூர்த்தி முன்னிலை வகித்தனர்.மாநில பொது செயலாளர் முத்து விசுவநாதன், மாநில துணைப் பொது செயலாளர் நேதாஜி, மதுரை மாவட்ட செயலாளர் காராமணி, மாநில இயற்கை விவசாயிகள் அணி செயலாளர் அலெக்ஸ் உள்பட பலர் விளக்க உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story