சேலம் அன்னதானப்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் அன்னதானப்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

சேலம் அன்னதானப்பட்டியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி 49-வது வார்டு, அன்னதானப்பட்டி பழனியப்பா காலனி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் நேற்று காலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணியாளர்களை முற்றுகையிட்டு, முறையாக குடிநீர் வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற அன்னதானப்பட்டி போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story