ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

 திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஏ ஐ டி யு சி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிமுறைகளை எளிமையாக்கிட வேண்டும், ஓய்வு ஊதியத்தை மாதம் 3 ஆயிரமாக உயர்த்திட வழங்க வேண்டும், இயற்கை மரணத்துக்கு வழங்கி வரும் உதவித்தொகையினை 5000 உயர்த்தி விபத்து மரணம் உதவித்தொகையினை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story