விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் தர்மலிங்கம் தலைமையில், மத்திய அரசு தேர்தலை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை தொடங்கிட வேண்டும்,மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணிநேர வேலை மற்றும் முழு ஊதியம் ரூ.319/- வழங்கிட வேண்டும்.

2023, 2024 ஆம் ஆண்டுக்கான நிலுவை சம்பளத்தை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மத்திய , மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story