அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஊடவியலாளரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊடவியலாளரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் அருகே பல்லடம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளரை, மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தமிழக நிருபர்கள் சங்க மாநில நிர்வாகி ராஜசேகர் தலைமையில் நடந்தது.

பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சார்பில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்படுத்த வேண்டும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், தே.மு.தி.க. மகாலிங்கம், நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் சித்ரா, மல்லிகா, முன்னாள் ம.தி.மு.க. நகர செயலர் விஸ்வநாதன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், உள்பட பலர் பங்கேற்று, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story