ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கடையில்  ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கடையில்  ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமரி மாவட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதல் நிலை ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் முயற்சியை கைவிட கேட்டு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கடை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

பைங்குளம், மெதுகும்மல் , விளாத்துறை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், விளாத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, பைங்குளம் ஊராட்சி துணைத் தலைவர் மேரி, விளாத்துறை துணைத்தலைவர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story