தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருக்கோவிலுார் கோட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில் சிறப்புரையாற்றினார். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், வசூல் மையங்களில் உள்ள நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்தல், பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றுதல், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வட்ட பொருளாளர் வெங்கடேசன், தலைவர் விஜயகுமார், கள்ளக்குறிச்சி கோட்ட தலைவர் கோபிநாத், கோட்ட செயலாளர் ராஜேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story